2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே மென்பந்து கிரிக்கெட் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால், வடமாகாண மாவட்ட பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்திய  பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது தடவையாகவும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வடமராட்சி பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 10 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை பெற்றது.
81 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை 10 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 65 ஒட்டங்களை பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .