2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இரண்டாமிடம் பெற்ற இரத்தினபுரி சுமன மகா வித்தியாலயம்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சிவாணி ஸ்ரீ

அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் 46 ஆவது தடவையாக நடாத்தப்பட்ட டு.ஏ. ஜயவீர கிண்ண குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டாமிடத்தை இரத்தினபுரி சுமன மகா வித்தியாலயம் பெற்றது.

கண்டி சாந்த சில்வெஸ்டர் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் 101 பாடசாலைகளை சேர்ந்த 478 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் இரத்தினபுரி சுமன மகா வித்தியாலயத்தை சேர்ந்த 13-18 வயதுக்குட்பட்ட 51 கிலோ கிராம் தொடக்கம் 54 கிலோ கிராம் எடைப் பிரிவின் கீழ் இரண்டு மாணவர்கள் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 13-14 வயதுக்குபட்ட 33 கிலோகிராம் தொடக்கம் 35 கிலோகிராம் எடைப் பிரிவின் கீழ் இரண்டு மாணவரகள் வெள்ளிப் பதக்கங்களையும் பெற்று வெற்றி கொண்டனர்.

இம்முறையே இரத்தினபுரி சுமன மகா வித்தியாலய வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி போட்டியில் கொழும்பு மாநாம வித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .