2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதான மார்க்கத்தில் 2 புதிய சேவைகள்

Freelancer   / 2021 ஜூலை 21 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான மார்க்கத்தில் இன்று (21) முதல் இரண்டு புதிய ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலை 5.40 கொழும்பு கோட்டையில் இருந்து வெயாங்கொடை வரையும், இரவு 7.00 மணிக்கு வெயாங்கொடையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலுமே  இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடுகதி ரயில் வெயாங்கொடை, கம்பஹா, கணேமுல்ல, ராகம சந்தி, ஹுணுபிட்டி, களனி, தெமட்டகொடை, மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இச்சேவை இடம்பெறாது என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .