2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அநுராதபுரத்தில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் 30 பேர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், தலாவ தம்மெத்தாவ பகுதியிலுள்ள ஜயகங்கையில் தனியார் பஸ் ஒன்று வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இந்த 30 பேரும் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார். படுகாயமடைந்த 10 பேர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

காயமடைந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குகின்றனர்.

குறித்த கங்கையில் நீர்மட்டம் குறைவாகக் காணப்பட்டமையால், விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .