2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அனர்த்த மரணம் 169ஆக அதிகரிப்பு

Menaka Mookandi   / 2017 மே 29 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 169ஆக அதிகரித்துள்ள அதேவேளை, காயமடைந்தோர் தொகை 88ஆகவும் காணாமற்போயுள்ளோர் தொகை 102ஆகவும் காணப்படுகிறது.

இவ்வனர்த்தங்கள் காரணமாக, 140,238 குடும்பங்களைச் சேர்ந்த 521,384பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 18,663 குடும்பங்களைச் சேர்ந்த 75,308பேர், 337 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே, பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .