2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இடம்பெயர்ந்தோருக்கு பணிபுரிந்த இலங்கை முஸ்லிம் பெண்மணிக்கு சர்வதேச விருது

Super User   / 2010 மார்ச் 03 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியொருவருக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச பெண்களுக்கான உயர் விருது கிடைத்துள்ளது.

சர்வதேச பெண்களுக்கான உயர் விருது வழங்கும் 10 பேரைக் கொண்ட பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியொருவரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று அறிவித்தது.

20 வருடகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றி வரும் ஜான்சிலா மஜீத் என்பவருக்கே  இந்த விருது வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இந்த விருதை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X