2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இராணுவ நீதிமன்ற விசாரணையை தவிர்த்தார் சரத் பொன்சேகா

Super User   / 2010 மே 04 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஏதிராக இன்று நண்பகல்  இடம்பெற்ற இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு பொன்சேகா சமூகமளிக்கவில்லை என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். 

எனினும் அவருடைய சட்டத்தரணிகள் இராணுவ நீதிமன்ற விசாரணையில் பங்குபற்றினார்கள் என்றும் இவ்விசாரணை தொடர்ந்து நாளை இடம்பெறும்  என்று பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற நேரத்தில் தனக்கு இராணுவ நீதிமன்ற விசாரணை இருப்பதாகவும் எனினும் தான்   நாடாளுமன்ற முழு அமர்விலும் கலந்துகொள்வதற்கான அனுமதியை சபாநாயகரிடம் ஜெனரல் சரத் பொன்சேகா வேண்டியிருந்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஸ நாடாளுமன்ற முழு அமர்விலும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா கலந்துகொள்வதற்கான அனுமதியை   வழங்கியிருந்தார்.



 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .