2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் நிபுணர் குழு;ஐ.நா செயலாளர் - நவநீதம்பிள்ளை கலந்துரையாடல்

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிபுணர்கள் குழுவை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன், ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் கலந்துரையாடியுள்ளார்.

பான்கீமூன் இன்னமும் நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

நவநீதம்பிள்ளை உட்பட தனது ஆலோசர்களிடம் பான்கீமூன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

எனினும், இலங்கையில் நிபுணர்கள் குழுவை கூடிய விரைவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X