2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை தமிழ் அகதிகள் 6 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் கைது

Super User   / 2010 ஏப்ரல் 04 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அகதிகள் ஆறு பேர் தமிழ் நாட்டிலிருந்து வெளியேறும் பொழுது தனுஷ்கோடி கடற்கரைப்பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் அகதி முகாம்களிலிருந்து வெளியேறும்போது குறிப்பிட்ட மாவட்டத்தின் அதிகாரிகளின் அனுமதியைப்பெறவில்லை என பொலீஸார் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிலுள்ள கரூர்,ஈரோடு, திருச்சிராப்பள்ளி,பவானி சாகர் ஆகிய முகாம்களிலிருந்து கடந்த மார்ச் 31ஆம் திகதி வெளியேறி ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர்.

படகுகளில் இவர்களை கொண்டுவந்தவர்கள் நான்காவது மண் பகுதியில் இறக்கி,இதுதான் தலைமன்னார் என்று கூறிச்சென்றார்கள் என்றுஅவர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .