2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ் - கண்டி ஏ - 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயம்

Super User   / 2010 மார்ச் 19 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திற்கும், கண்டிக்கும் இடையிலான ஏ - 9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

ஏ - 9 வீதியில் அமைந்துள்ள சாவகச்சேரிப் பகுதியில் இன்று காலை 6 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வானும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .