2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்திப்பு;மனோ கலந்துகொள்ளவில்லை

Super User   / 2010 ஏப்ரல் 27 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கேம்பிரிஜ் பிளேஸில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாகவும், ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்காலம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எனினும், எதுவித முடிவும் இல்லாமல் சந்திப்பு நிறைவுபெற்றுள்ளது.

இவர்கள் மீண்டும் நாளை காலை சந்திக்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இச்சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X