2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கண்டியில் நடைபாதை வியாபாரக் கடைகளை அகற்றும் உத்தரவு அமுல்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாநகர எல்லைக்கு உட்பட்ட வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும்  நடைபாதை வியாபாரக் கடைகள் இன்று காலை பலவந்தமாக அகற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் மேற்படி நடைபாதை வியாபாரக் கடைகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தகவல்கள் குறிப்பிட்டன.

இந்த நடவடிக்கைக்கு எதிராக தாம் மோதல்களில் ஈடுபடவில்லை என்பதுடன், எனினும், குறித்த இடத்திலிருந்துகொண்டு தாம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் நடைபாதை வியாபாரக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

கண்டி வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதை வியாபாரக் கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கண்டி மாநகர பதில் மேயர் சுமிந்த  விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • nuah Monday, 26 April 2010 10:05 PM

    கொழும்பிலும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப் படுவதை நான் வரவேற்கிறேன், அங்கே போக மறுக்கின்றவர்களை வேண்டுமானால் பலவந்தமாக அப்புறப் படுத்தலாம், இவ்விஷயங்களில் சகல ஒப்பந்தங்களையும் முன்னறிவித்தல்களையும் எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியிடவேண்டும் முற்கூட்டியே. 'எங்களுக்கு முன்னறிவித்தல் இல்லை' என்பதே எப்போது பார்த்தாலும் போராட்டம்.

    Reply : 0       0

    srikant Thursday, 29 April 2010 09:28 PM

    நானும் அது போன்ற ஏற்பாட்டை வரவேற்கிறேன். ஆனால் அவ்விடத்தில் வியாபாரம் இல்லை, சாலை ஓரத்தில் நின்றால் தான் வியாபாரம் என்று மீண்டும் ரோட்டோரத்துக்கே வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. கொடுத்த இடத்தை விற்று விட்டு இன்னோர் இடத்தை பிடித்துக் கொண்டவர்களும் இருக்கின்றனர். இது செல்லரித்துப்போன ஓட்டை 30 வருட அரசியல் ஆகும். தலையிடும் அரசியல்வாதிகள் செல்லாக்காசுகள். அனுதாபம் முதலைக்கண்ணீர். நாங்கள் வீதிக்கு வந்து விட்டோம் என்று கூறுவதோ அதுதான் எங்களுக்கு வேண்டும் என்பதோ அனுதாபத்திலே காலமெல்லாம் வாழலாமென்றா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X