2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 15ஆம், 17ஆம் திகதிகளில் 650 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

Super User   / 2010 மார்ச் 12 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 15ஆம், 17ஆம் திகதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ்மிரர் இணையதளம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் 15ஆம் திகதி கராச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த நான்கு கிராமசேவையாளர் பிரிவுகளான தொண்டமாநகர், கிருஷ்ணபுரம், செல்வநகர், அம்பாள்குளம் ஆகிய இடங்களில் மீள்குடியேற்றப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 17ஆம் திகதி கண்டாவளைப் பிரிவைச் சேர்ந்த மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளான தட்டுவன்கொட்டி, கோரளைக்கட்டு, முரசுமோட்டை ஆகிய இடங்களிலும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாகவும் றூ.கேதீஸ்வரன்  குறிப்பிட்டார்.

இந்த இரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் சுமார் 650 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் எனவும் றூ.கேதீஸ்வரன்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X