2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சேயா படுகொலை: மாணவனும் குடும்பஸ்தரும் விடுதலை

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கொட்டதெனியாவ 5 வயது சிறுமியான சேயா சந்தவமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைச்செய்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 வயதான மாணவனும், ஒரு குழந்தையின் தந்தையையும் (31) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் DNA மாதிரிகள், பொருந்தவில்லை என்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து அவ்விருவரையும் விடுவிக்குமாறு இரகசிய பொலிஸார் விடுத்த கோரிக்கையை அடுத்தே மினுவாங்கொடை நீதவான் டி.ஏ. ருவன்பத்திரண அவ்விருவரையும் விடுவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .