2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனநாயக தேசிய முன்னணி உறுப்பினருக்கு நீதிமன்ற உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்ட விதிகளை  மீறியமை தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்கு   கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு  ஜனநாயக தேசிய முன்னணியின் முக்கிய உறுப்பினர்களுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி, அர்ஜூன ரணதுங்க, லக்ஸ்மன் நிபுணாராய்ச்சி மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா ஆகியோருக்கே கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு 48 மணித்தியாலத்திற்கு முன்னராக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால்  ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி   ஜனநாயக தேசிய முன்னணியினர் கூட்டமொன்றை நடத்தியிருந்தனர். இது தேர்தல் சட்ட விதிகளை மீறுவதாகக் கூறி கொழும்பு நீதிமன்றத்தில் கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ண வழக்குத் தாக்கலொன்றை செய்திருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .