2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான நீதிமன்ற விசாரணை விரைவில்

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்வரும் நான்காம் திகதி நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் நான்காம் திகதி நாடாளுமன்ற நிகழ்வுகள் இடம்பெறவிருக்கிறது. ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

இந்த நிலையிலேயே, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்வரும் நான்காம் திகதி நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அடுத்த இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்துவதற்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .