2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஜெனரல் பொன்சேகா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 மார்ச் 14 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னராக,  எதிர்வரும் 16ஆம் திகதி ஒவ்வொரு நகரங்களிலும் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களிடம், ஜனநாயக தேசிய முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஜனநாயக தேசிய முன்னணியின் கூட்டுக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அன்றையதினம் நடைபெறும் பௌத்த மத வழிபாடுகளிலும், ஏனைய மத நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளுமாறும் மக்களிடம், அநுரகுமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.






 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X