2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பௌத்தமத குருமார் பலவந்தமாக வெளியேற்றம்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்தமத குருமார்களை இன்று பொலிஸார் பலவந்தமாக  வெளியேற்றியுள்ளனர்.

அத்துடன், பௌத்தமத குருமார்கள் தங்கியிருந்து உண்ணாவிரதத்தை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களையும் பொலிஸார் அகற்றியுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்தமத குருமார்கள் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த 3ஆம் திகதி  உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .