2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைச்சரின் ஆதரவாளர்களினால் தமிழ் தோட்ட தொழிலாளர் மீது தாக்குதல்

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் அலுத்கமேக்கு ஆதரவான குண்டர்கள் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மக்களை  வாக்களிக்க விடாமல் தடுத்து வருவதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

கலாட்டா, அத்தவேஜ், மொஸாவில் ஆகிய தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

இந்தத் தாக்குதல்ச் சம்பவத்தின்போது, தனது ஆதரவாளர்கள் இருவர் காயமடைந்திருப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 08 April 2010 08:56 PM

    இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் அட்டையும் விநியோகிக்கப் படாமல் தடுக்கப் பட்டதாகவும் தெரிகிறது. தபால் நிலையங்களில் தேங்கிக் கிடக்கிறதாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X