2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாளை கொழும்பு வரும் நிருபமா ராவ் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சு?

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தமிழ்மிரர் இணையதளத்திடம் சற்று முன் தெரிவித்தார்.

இலங்கையின் முன்னாள் இந்தியத்தூதுவரான நிருபமா ராவ்,வெளிநாட்டமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் முதல் தடவையாக இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தேர்தல் இடம்பெறவுள்ள காலகட்டத்தில் நிருபமா ராவின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கைத்தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் முக்கிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .