2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்துப்பேச நாம் தயார் -கஜேந்திரகுமார் பொ

Super User   / 2010 மார்ச் 01 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE  புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்றுமுன் அளித்த பிரத்தியேகப்பேட்டியில் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த மக்கள் தனித்தாயகம் அமைப்பது குறித்துப்பேசுவது ஜனநாயகத்தின் அடிப்படையிலானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாங்கள் உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கட்சி யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் போட்டியிடுவதாகவும் கூறினார்.

ஏனைய கட்சிகளைப்போல் இல்லாமல்   அண்மைக்காலம்வரை,தமிழ் தேசியக்கூட்டமைப்பு எமது அடிப்படை கொள்கைகளுடன் இணைந்து போனதால்தான் எம்மால் கூட்டமைப்பின் சம பங்காளியாக இருக்க முடிந்தது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

எத்தனை ஆசனங்களை எதிர்ப்பார்ர்க்கின்றீர்கள் என தமிழ்மிரர் கேட்டபோது எத்தனை ஆசனங்கள் என்பதைவிட, தாங்கள் வெற்றிபெறுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X