2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொலீஸ் அச்சுறுத்தல் :தமிழக அகதி முகாமில் இலங்கைப்பெண் தீக்குளிப்பு

Super User   / 2010 மார்ச் 09 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசிக்கும் பெண்மணியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

கரூர் அருகே ராயனூர் என்னுமிடத்தில் பொலீஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்பெண் தீக்குளித்துள்ளார் என்றும் தற்போது கரூர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக தகவல்கள் கூறுகின்றன.

கொலைக்குற்றச்சாட்டின் பேரில் இவரது கணவர் சிறையிலிருக்கின்றார்.விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இப்பெண் பொலீஸாரினால் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலைத்தொடர்ந்து இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எனினும் இக்குற்றச்சாட்டை பொலீஸார் மறுத்துள்ளனர். 

You May Also Like

  Comments - 0

  • Alex Eravi Wednesday, 10 March 2010 04:25 PM

    இதற்கு இன்று நமது தாயகத்தில் வாக்கு வேட்டைக்காக இறங்கியிருக்கும் எமது வேட்டையாளர்கள் (ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் வேட்டையாளர்கள்) குரல் கொடுப்பார்களா? இன்று இவ் வாக்கு வேட்டையாடும், வேட்டையாளர்கள் இவர்களை தாயகம் அழைத்து மீள் குடியேற்றினால் அவ் இரண்டு இலட்ச்சத்திர்க்கும் மேற்ப்பட்ட வாக்குகளும் இவர்களுக்குத்தானே, அதைதன்னும் சிந்திக்கிறார்களா?
    குஷ்புவிற்கு, ராதிகாவிற்கு, நமீதாவிற்கு, நயன்தாராவிற்கு ஓர் பிரச்சனைஎன்றால் தமிழகமே திரண்டு எழும்!

    ஏன் நம் நாட்டிலும் வசந்தம் கொண்டாடுபவர்கள் அவர்களைக் கூப்பிட்டு அரங்கேற்றி மாலைகள் , பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவார்கள். அதுமட்டுமா இதை எதோ ஈழத்தமிழரின் அடிப்படைப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டதாக பிரச்சாரம் செய்யும் இணையதளங்கள் வேறு. கூலிக்கு மாரடிப்பவர்களை, கவர்ச்சியை காட்டுபவர்களை இவ்வளவு பணம் செலவழித்து கூப்பிடுகிறவர்கள், ஏன் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கூப்பிடக்கூடாது.......

    எல்லாவற்றிக்கும் மனிதாபிமானம் வேண்டும்!

    -அலெக்ஸ் இரவி

    More news in
    http://inioru.com/?p=11243
    http://inioru.com/?p=11266
    http://www.athirady.info/archives/63033

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .