2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிள்ளையான் கட்சியின் தோல்விக்கு வன்முறை அரசியலை தமிழ்மக்கள் நிராகரித்ததே காரணம் - கருணா

Super User   / 2010 ஏப்ரல் 10 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

வன்முறை அரசியலை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தோல்வி காட்டுகின்றது.

இவ்வாறு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்  தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தோல்வியடைந்துள்ளது.

இது குறித்து தமிழ்மிரர் இணையதளம் அமைச்சர் முரளிதரனிடம் கேள்வி எழுப்பியது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஆளும் கட்சி பெரு வெற்றியடைந்துள்ளது.

தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும்,அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்துச்செல்ல்வதற்கும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் முரளிதரன் தமிழ்மிரர் இணையதளத்துக்குத்தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .