2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மத்திய மலைநாட்டில் கடும் காற்றுடன் பனிப்பொழிவு

Menaka Mookandi   / 2017 மே 29 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டின் மேற்குச் சாய்வுப் பிரதேசங்களில், இன்று காலை முதல், கடும் காற்று வீசி வருகின்றது. இதனால், பிரதான வீதிகளில், மரங்கள் முறிந்துவிழும் அபாய நிலை தோன்றியுள்ளதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் காற்று காரணமாக, பல பிரதேசங்களில், அடிக்கடி மின்சார விநியோகம் தடைப்பட்டும் வருகின்றது. சில பிரதேசங்களில் மழை பெய்து வருவதாகவும் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மத்திய மலைநாட்டில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையை எதிர்ப்பார்க்க முடியும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .