2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் கடத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது, கடத்தப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியா அலுவலக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கைதுசெய்யப்பட்ட குறித்த உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே, மேற்படி கடத்தப்பட்டிருந்த நபர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .