2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் பொது இடங்களிலிருந்து வெளியேறுவதற்கு படையினர் தீர்மானம்

Super User   / 2010 மே 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் சுமர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் நிலைகொண்டுள்ள பாதுகாப்புப்  படையினர் அங்கிருந்து வெளியேறவுள்ளனர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதியுடன் ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையிலேயே அவர்கள் இவ்வாறு வெளியேறவுள்ளனர்.

இந்நிலையில், பூந்தோட்டம் சிறுவர் பூங்கா மைதானம், வவுனியா குளக்கட்டு மற்றும் பிரதான வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

அத்துடன், பாக் வீதியிலுள்ள நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியசாலையில் தங்கியிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 02 May 2010 09:43 PM

    நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது!! புது யுகமும் பிறக்கட்டும்!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X