Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 08 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 மாணவிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதியின்றி கடந்தவாரம் போராட்டமொன்றில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இவர்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகத்திற்கு இடையூறு விளைவிப்பதற்கு முயற்சி செய்ததற்காக மேற்படி மாணவர்களை இடைநிறுத்தியதாக பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்ததாக பல்கலை மாணவ ஒன்றியத்தின் பேச்சாளர் கெம்புருகமுவே ஞானஸ்ஸர தேரர் தெரிவித்தார்.
இம்மாணவிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுவரையில் இப்பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 50 மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று பல்கலை மாணவ ஒன்றியத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago