2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உயர்மட்ட அரசாங்க குழுவினர் இந்தியா செல்ல தீர்மானம்

Super User   / 2009 டிசெம்பர் 09 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூன்றுபேர் கொண்ட உயர்மட்ட அரசாங்கத் தூதுக்குழுவினர் இந்த மாதக் கடைசியில்  இந்தியாவுக்கு பயணமாகவுள்ளனர்.  

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த தூதுக்குழுவில் அடங்குவார்கள்.

இந்தியாவுக்கு செல்வது தொடர்பில் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இந்திய உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுடன்  பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காவே இந்தியாவுக்கு பயணமாகவிருப்பதாகவும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .