2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மோதலுக்கு காரணம் பிள்ளையான் ஆதரவாளர்கள்:கருணா குற்றச்சாட்டு

Super User   / 2009 டிசெம்பர் 18 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றிருந்த மோதலுக்கு அந்த மாகாணத்தின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆதரவாளர்களே காரணமென தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு நேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் விநாயமூர்த்தி முரளிதரன் கூறினார்.

இதேவேளை, அம்பாறை திருக்கோவில் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
அமைப்பின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆதரவாளர்களுக்கும்,
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை மோதல் ஏற்பட்டிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்திருந்தார்.

இந்த மோதலின்போது, 2 பேர் காயமடைந்திருப்பதுடன்,வாகனமொன்று
எரியூட்டப்பட்டதாகவும்  ஆசாத் மௌலான டெய்லிமிரர் இணயத்தளத்திற்கு குறிப்பிட்டிருந்தார்.

விநாயமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளர் இனியபாரதியின் தலைமையிலானவர்களே சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆதரவாளர்களைத் தாக்கியதாகவும் ஆசாத் மௌலானா  தெரிவித்திருந்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .