2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தம்பர அமில தேரர் பிணையில் விடுதலை

Super User   / 2010 ஜனவரி 08 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசாபிமான அமைப்பின் தலைவர் தம்பர அமில தேரர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தம்பர அமில தேரர்  ஹொறண  நீதிமன்றத்தின் முன்னிலையில்  25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், இரண்டு பேரின் சரீரப் பிணையிலும்  விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி  மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

பொதுமக்களிடமிருந்து நிதி சேகரித்து வெளிநாடுகளுக்கு பொதுமக்களை அனுப்பிவைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் தம்பர அமில தேரர்  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .