2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தமுடியாது; பாலித கோஹன

Super User   / 2010 ஜனவரி 18 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள எந்தவொரு நபரையும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தமுடியாதென ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கைக்கு எதிராக ஒரு சில நாடுகள்  மாத்திரமே குற்றச்சாட்டுக்களை கிளப்பிவருவதாகவும் பாலித கோஹன குறிப்பிட்டார். இலங்கை தொடர்பில் சில முக்கிய நாடுகள் உட்பட பெரும்பான்மையான சர்வதேச சமூகம் தனது கவலையை  வெளியிடவில்லையெனவும் பாலித கோஹன தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .