2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

லசந்தவின் கொலையை நேரில் கண்ட சாட்சி இருப்பதாக சிஐடி தகவல்

Super User   / 2010 ஜனவரி 22 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை நேரில் பார்த்த சாட்சி் இருப்பதாக கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்  தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் நேற்று கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தபோதே குற்றப்புலனாய்வுப் பிரிவினர்  இதனைக் குறிப்பிட்டனர்.

பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு குறித்த சாட்சி தொடர்பில் தகவல்களை வெளியிடமுடியாதெனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். எனினும், குறித்த சாட்சியத்திடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X