2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புலிகள் இலக்கை நிறைவேற்ற வேறு வழியில் முனைவதாக போகொல்லாகம குற்றச்சாட்டு

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு தமது இலக்கை நிறைவேற்றிக்கொள்வதற்காக தற்போது ஏனைய வழிகளில்  செயற்பட முயன்றுவருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அகமட் ஷஹிட்டுனான சந்திப்பிலேயே அவர்  இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் அச்சுறுத்தல்களுக்கான ஆபத்தை எதிர்நோக்கிவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, இரு நாடுகளும் தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும் எனவும் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X