2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விசாரணை நடத்துமாறு இலங்கை வலியுறுத்தல்

Super User   / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜமீலா நஜ்முதீன்)

இலங்கைப் பணிப்பெண்ணான எல்.ரி.ஆரியவதியின் உடலில் சவூதி அரேபிய எஜமானரால் 24 ஆணிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு  சவூதி அரேபிய அரசாங்கத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சவூதி வெளிவிவகார அமைச்சுடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் இருப்பதாக அப்பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இதேவேளை, ஆணிகள் அகற்றப்படுவதற்காக சத்திரசிகிச்சைக்குள்ளான ஆரியவதி வீடு திரும்பியபோதிலும் தற்போது மருத்துவ சோதனைக்காக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .