2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடுத்த வருட முற்பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்படும்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

இலங்கையின் வடபகுதியில் பெற்றோலிய ஆய்வுகளை மேற்கொண்ட கெய்ன் (இந்தியா) கம்பனி, அடுத்த வருட முற்பகுதியில் 3 எண்ணெய்க் கிணறுகளை தோண்டவுள்ளது என பெற்றொலியவள அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் நீல் டி சில்வா இன்று கூறினார்.

இலங்கை 2007 இல் காவேரி பள்ளப் பகுதியில்  சி1, சி2, சி3 என மூன்று துண்டுகளை எண்ணெய் ஆராய்ச்சிக்காக ஏலம் விட்டது.

சி2 பகுதியில் எண்ணெய் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட கெயன் (இந்தியா) கம்பனியே அங்கு பரிசோதனை ரீதியாக கிணறுகளைத் தோண்டவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X