2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்ப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(காந்திய சேனநாயக்க)

நாட்டின் பல பாகங்களிலும் வானம் மப்பும் மந்தாரமாக காணப்படுவதுடன், இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் மின்னல் ஏற்படுவதுடன்,  பலத்த காற்று வீசுமெனவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.  மேல்மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே இன்று காலை மழை பெய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள  உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி மழை காரணமாக பாதிப்படையலாமெனவும்  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X