2024 மார்ச் 28, வியாழக்கிழமை

செல்லிடத் தொலைபேசி மூலம் துரிதமாக சான்றிதழ்களை பெறும் வசதி

Super User   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்னா பரணமான்ன)

செல்லிடத் தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.

'இத்திட்டத்தின்படி, இச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் செல்லிட தொலைபேசி மூலம் செலுத்த முடியும்: எனவும் அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X