2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தாக்குதல் வான்கலங்களை வழங்க முன்வந்தது இலங்கை; ஐ.நா. ஏற்க மறுக்கும்?

Super User   / 2011 ஜூன் 16 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.நா. படையினருக்கு  3 எம்.ஐ.-24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மற்றும்  இரு விமானங்களை வழங்குவதற்கு இலங்கை முன்வந்துள்ளதாகவும் ஆனால் அவற்றை ஐ.நாவினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம் எனவும் டர்டில்பே செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் கொங்கோ, சூடான் ஆகிய நாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. படையினருக்கு தாக்குதல் வான் கலங்கள் போதாமலுள்ள நிலையில் ஐ.நாவுக்கு உதவுவதற்காக இவ்வான்கலங்களை வழங்க இலங்கை முன்வந்துள்ளதாக ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி டர்டில்பே செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரங்கள் தொடர்பாக இலங்கைப் படையினர் உன்னிப்பான அவதானத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில் இலங்கை வழங்க முன்வந்த வான் கலங்களை ஏற்றுக்கொள்ளவது சர்ச்சையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இலங்கயின் மனித உரிமை நடவடிக்கை குறித்து அமெரிக்க மீளாய்வையும் தூண்டும் என மேற்படி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • maankaai madayar. Friday, 17 June 2011 09:20 AM

    பொருளாதார நிலை மோசம். அதேநேரம் இதை குடுத்து சமாளிப்பு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .