2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பஸ் கட்டணங்களுக்கான முற்கொடுப்பனவு அட்டை

Super User   / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

பஸ் கட்டணங்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்துவதில் தனியார் போக்குவரத்து அமைச்சு போதிய ஆதரவளிக்காமை குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அமைச்சின் ஆதரவின்றி இத்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துத முடியாது எனவும் அச்சங்கம் கூறியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருட நிறைவை முன்னிட்டு செப்டெம்பர் 24 ஆம் திகதி முற்கொடுப்பனவு அட்டை திட்டத்தை பரீட்சார்தமாக அமுல்படுத்த இச்சங்கம் தீர்மானித்தது. எனினும் இத்றகு அமைச்சு போதிய ஆதரவு வழங்கவில்லை என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கூறினார்.

இத்திட்டத்தை மத்திய வங்கி அங்கீகரித்துள்ளதாகவும் போக்குவரத்து அதகாரிகளும் ஆதரவளித்தால் இத்திட்டத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் வெற்றிகரமாக அமுல்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் 20,500 பஸ்கள் இயங்குவதாகவும்அவர்களில் 15,000 பஸ்கள் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு சொந்தமானவை எனவும் கெமுனு விஜேரட்ன கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • meenavan Tuesday, 13 September 2011 05:13 AM

    சாரதிகள்,நடத்துனர்களுக்கு சில்லறை மூலம் கிடைக்கும் ஆதாயம் இல்லாமல் ஆகி விடும் என்ற கவலை,இதன் பின்புலமாக இருக்கும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .