2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாலித்த எம்.பி.க்கு விளக்கமறியல் நீடிப்பு

Administrator   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவின் விளக்கமறியல் பெப்ரவரி 8ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.


அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச்சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை முழதாளிடவைத்து துன்புறுத்தியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


அவரை இன்று திங்கட்கிழமை 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கடந்த 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .