2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் சந்திரநேரு எம்.பி காயம்

Super User   / 2010 ஜனவரி 18 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளதால் காயமடைந்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசத்தில்  நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த  சந்திரகாந்தன் சந்திரநேரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறு  சந்திரகாந்தன் சந்திரநேருவின் கைத்துப்பாக்கி தவறுதலாக
வெடித்தமை இது இரண்டாவது தடவையெனவும் குறிப்பிடப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X