2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூன்று அரசியல் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் வேட்புமனுத் தாக்கல்

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி உட்பட  யாழ் குடாநாட்டில் மூன்று அரசியல்க் கட்சிகளும், இரண்டு   சுயேட்சை வேட்பாளர்களும் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா ஜாதிக பெரமுன சார்பில் முதன்மை வேட்பாளர் சம்பத் விதானவும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளர்   விஜயகலா மகேஸ்வரனும், உலக சோசலிச சமத்துவக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளர் திருச்செல்வம் சுப்பிரமணியம் ஆகியோர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, சுயேட்சை வேட்பாளர்களான சண்முகநாதன் மனோகரன், கதிரவேல் செவ்வேள் ஆகியோர்  இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நேற்று முன்தினமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .