2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

6 ஐ.தே.க. எம்.பிகள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Super User   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இந்திக சிறி அரவிந்த)

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் கட்சி அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக  வாக்களித்ததுடன் அரசாங்க வரிசைக்கு மாறியதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டடுள்ளது.

இந்த எம்.பிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

அப்துல் காதர், லக்ஸ்மன் செனவிரட்ன, ஏர்ல் குணசேகர,  உபேக்ஷா சுவர்ணமாலி, என். விஜேசிங்க, மனூஷ நாணயக்கார ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்க வரிசைக்கு மாறியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .