2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

80 சதவீத நீர் வழங்கல் கட்டமைப்பு பாதிப்பு

Editorial   / 2017 மே 31 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளம் காரணமாக சுமார் 80 சதவீதமான நீர் வழங்கல் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட குறித்த நீர் வழங்கல் கட்டமைப்புகளைச் சுத்திகரிக்கும் பணிகள், இன்று (31) முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முப்படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள், இப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .