2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வவுனியா பஸ் விபத்தில் இருவர் உயிரிழப்பு

Super User   / 2010 ஜனவரி 17 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் யாழ்ப்பாணத்திற்கும், கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ் ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன்,  9 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பஸ் பாதையை விட்டு விலகி மரத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  இன்று அதிகாலை 1.32 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஓட்டுனர் பஸ்ஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. 

இந்த விபத்து தொடர்பில் வவுனியாப் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X