2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இணக்கியது அரசாங்கம்’

Yuganthini   / 2017 ஜூன் 12 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை மாதம் 1ஆம் திகதிமுதல், மேற்கொள்ளவுள்ள தனியார் பஸ் கட்டணத் திருத்தத்தின் போது, ஆகக்குறைந்த கட்டணம் 6 சதவீதத்துக்கும் 7 சதவீதத்துக்கும் இடைப்பட்ட தொகையொன்றில் அதிகரிக்கப்படவேண்டும் என்று, அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்துள்ளதாகவும் அந்த யோசனைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார். 

பணவீக்கம் உயர்ந்துசெல்வதை கவனத்தில் கொண்டே, இந்த யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   

நாரஹேன்பிட்டியவில் உள்ள சங்கத்தின் தலைமையத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .