2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தியாவின் உடனடி உதவி

Freelancer   / 2022 மே 14 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம்  மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை  வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறித்த  யூரியா உரத் தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ்,  குறித்த உதவி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அத்துடன்   நடப்பு நெற்பயிர்ச்செய்கைக்கான மொத்த  உரத்தேவை  இதனூடாக பூர்த்தி செய்யப்படுவதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .