2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நுழைவுச்சீட்டு விற்பனை தொடங்கியது

J.A. George   / 2023 மே 26 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள்  விற்பனை ஆரம்பமாகியுள்ளன.

இன்று காலை 9 மணி முதல் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு சென்று நுழைவுச்சீட்டுகள்  வாங்க முடியும்.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

3 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இதுவரை 7 போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் இலங்கை 4 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X