2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த டயகம சிறுமி மரணம்

J.A. George   / 2021 ஜூலை 16 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில்  பணிபுரிந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (16) தெரிவித்தார். 

ரிஷாட் பதியுதீனின் வீட்டில்  பணிபுரிந்த  குறித்த சிறுமி, தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த போது, நேற்று  (15) உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நுவரெலியா டயகம பகுதியை சேர்ந்த 16 வயது 8 மாதங்கள் வயதுடைய சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கடந்த ஜூன் 3 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இந்த சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகள் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், பொரளை பொலிஸாரால் இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X