2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக ஊழியர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை விரைபடுத்துமாறு  கோரி அனைத்து பல்கலைக்கழக ஊழியர் கழக   சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த சுகவீன விடுமுறைப் போராட்டம்    நேற்று திங்கட்கிழமை நாடு பூராகவுமுள்ள 15 பல்கலைக்கழகங்களில் நடைபெற்றன.

தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்களும் ஊழியர்களும்  நேற்றையதினம்   சுகவீன போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இதற்கு முன்னோடியாக கடந்த 07ஆம் திகதி ஒரு மணிநேர அடையாள வேலை நிறுத்தம் பல்கலைக்கழகங்களில் நடைபெற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X